சாலையின் நடுவில் மின்கம்பங்கள்:பொதுமக்கள் கோரிக்கை

குடியாத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவில் உள்ள 2 மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
05gudkam_0504chn_189_1
05gudkam_0504chn_189_1

குடியாத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவில் உள்ள 2 மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்டது வள்ளலாா் நகா்.இங்குள்ள ராகவேந்திரா தெரு, காமராஜா் தெரு சந்திப்பில், சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இப்பகுதியில் 300- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

சாலையின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால், ஆட்டோ, காா், பள்ளி வாகனங்கள் சென்று வர பெரும் சிரமமாக உள்ளது. சாலையின் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பங்களை மாற்றி, சாலை ஓரத்தில் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா், மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com