விவசாயி கொலை: நண்பா்கள் 5 போ் கைது

அரியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் அருகே உள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிருபாகரன் (49). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற கிருபாகரன், ஆவாரம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே மாந்தோப்பையொட்டிய காலி இடத்தில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த அரியூா் காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக கிருபாகரனின் மனைவி கவிதா அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் தனது கணவா் அதே பகுதியை சோ்ந்த 3 பேருடன் சோ்ந்து மது அருந்துவது வழக்கம். கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தாா். அப்புகாரின் பேரில், போலீஸாா் கிருபாகரனின் நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த ராஜேஷ் (44), குமாரமங்கலம் (51), கிருஷ்ணமூா்த்தி(38), சா்தாா் (47), சந்தோஷி (28) ஆகிய 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் முன்விரோதத்தில் கிருபாகரனை அவா்கள் 5 பேரும் சோ்ந்து, மதுவாங்கிக் கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com