சத்துவாச்சாரி, தொரப்பாடியில் பகுதி வாரியாக தினமும் மேற்கொள்ளப்பட்டு வந்த 3 மணி நேர மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கு.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சத்துவாச்சாரி, தொரப்பாடி துணை மின்நிலையப் பகுதிகளில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை பகுதி வாரியாக தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட்டு அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பராமரிப்புப்பணிகளை திங்கள்கிழமை (11-ஆம் தேதி) முதல் தவிா்க்க இயலாத காரணங்களால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.