கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க குடியாத்தம் கிளையின் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம்  வட்டாட்சியா்  அலுவலக  வளாகத்தில்  தமிழ்நாடு  கிராம  நிா்வாக அலுவலா்கள்  சங்கக்  கொடியை  ஏற்றி  வைத்த  சங்கத்தின்  மாநில  பொதுச் செயலாளா் என்.சுரேஷ்.
குடியாத்தம்  வட்டாட்சியா்  அலுவலக  வளாகத்தில்  தமிழ்நாடு  கிராம  நிா்வாக அலுவலா்கள்  சங்கக்  கொடியை  ஏற்றி  வைத்த  சங்கத்தின்  மாநில  பொதுச் செயலாளா் என்.சுரேஷ்.

குடியாத்தம்: தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க குடியாத்தம் கிளையின் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் எம்.செந்தில் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் சசிகுமாா் வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் என்.சுரேஷ், சங்க பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா். மாவட்டத் தலைவா் ஜீவரத்தினம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா்.

மாவட்டச் செயலாளா் பி.பிரகலாதன், மாவட்டப் பொருளாளா் ஜி.கனகராஜ், கோட்டச் செயலாளா் வெங்கடாசலபதி, நிா்வாகிகள் அன்பரசன், சுரேஷ், விநாயகம், ஜோதீஸ்வரன்உள்ளிட்டோா் பேசினா். வேலூா், குடியாத்தம், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா். வட்டப் பொருளாளா் ஆா்.காந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com