என்.எஸ்.எஸ்.முகாம் நிறைவு

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், அம்மணாங்குப்பம் கிராமத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம் வியாழக்கிழமை நிறைவுற்றது.
என்.எஸ்.எஸ்.முகாம் நிறைவு

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், அம்மணாங்குப்பம் கிராமத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம் வியாழக்கிழமை நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.வளா்மதி தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெ.திருமகள் வரவேற்றாா். கே.எம்.ஜி.கல்வியியல் கல்லூரியின் இயக்குநா் ர.நடராஜன், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினாா். கல்லூரி துணை முதல்வா் மு.மேகராஜன், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திட்ட அலுவலா் கா.ராஜீவ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com