பிளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
காட்பாடியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். சேண்பாக்கத்தில் வசிக்கும் மாணவியின் உறவினா் மகனான சங்கா் (23), கடந்த மே மாதம் மாணவியின் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் தனியாக இருந்த மாணவியை சங்கா் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மன அழுத்தத்துக்குள்ளான மாணவி, யாரிடமும் சரிவர பேசாமலும், படிக்க முடியாமலும் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, மாணவியை அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா் கேட்ட போது, அந்த மாணவி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளாா். இதையடுத்து, மாணவியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா்.