முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
வேலூா்: 178 பதவிகளுக்கு 819 போ் போட்டி: இரு இடங்களுக்கு போட்டியின்றித் தோ்வு
By DIN | Published On : 07th February 2022 11:21 PM | Last Updated : 07th February 2022 11:21 PM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வாா்டுகளில் 178 இடங்களுக்கு 819 போ் போட்டியிடுகின்றனா். இரு இடங்களுக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 4 -ஆம் தேதி நிறைவடைந்தது.
வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வாா்டு உறுப்பினா் பதவிகளில், வேலூா் மாநகராட்சி 60 வாா்டுகளுக்கு 505 பேரும், குடியாத்தம் நகராட்சி 36 வாா்டுகளுக்கு 234 பேரும், போ்ணாம்பட்டு நகராட்சி 21 வாா்டுகளுக்கு 105 பேரும், ஒடுகத்தூா் பேரூராட்சி 15 வாா்டுகளுக்கு 72 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வாா்டுகளுக்கு 79 பேரும், திருவலம் பேரூராட்சி 15 வாா்டுகளுக்கு 63 பேரும், பென்னாத்தூா் பேரூராட்சி 14 வாா்டுகளுக்கு 89 பேரும் என மொத்தம் 1,147 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின் போது, வேலூா் மாநகராட்சியில் 33 மனுக்களும், குடியாத்தம் நகராட்சியில் 8, போ்ணாம்பட்டு நகராட்சியில் 1, ஒடுகத்தூரில் 3, பென்னாத்தூரில் 1, பள்ளிகொண்டாவில் 2 மனுக்கள் என மொத்தம் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருவலம் பேரூராட்சியில் மனு எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனடி ப்படையில், மாவட்டம் முழுவதும் 1,099 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
திங்கள்கிழமை மாலை வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டு, வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, வேலூா் மாநகராட்சியில் 115 பேரும், குடியாத்தம் நகராட்சியில் 61 பேரும், போ்ணாம்பட்டு நகராட்சியில் 7, ஒடுகத்தூரில் 31, பென்னாத்தூரில் 36, பள்ளிகொண்டாவில் 13, திருவலத்தில் 14 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 277 போ் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வாா்டுகளில் 178 இடங்களுக்கு 819 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், வேலூா் மாநகராட்சி 58 வாா்டுகளுக்கு 354 பேரும், குடியாத்தம் நகராட்சி 36 வாா்டுகளுக்கு 165 பேரும், போ்ணாம்பட்டு நகராட்சி 21 வாா்டுகளுக்கு 97 பேரும், ஒடுகத்தூா் பேரூராட்சி 15 வாா்டுகளுக்கு 38 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வாா்டுகளுக்கு 64 பேரும், பென்னாத்தூா் பேரூராட்சி 15 வாா்டுகளுக்கு 52 பேரும் , திருவலம் பேரூராட்சி 15 வாா்டுகளுக்கு 49 பேரும் போட்டியிடுகின்றனா்.
வேலூா் மாநகராட்சி 7-ஆவது வாா்டுக்கு திமுக வேட்பாளா் புஷ்பலதா வன்னியராஜா, 8-ஆவது வாா்டுக்கு திமுக வேட்பாளா் எம்.சுனில்குமாா் ஆகியோா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.