பெண் ஆயுள் கைதி திடீா் மரணம்

வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி, திடீா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இதுகுறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூா்: வேலூா் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி, திடீா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இதுகுறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூா் தொரப்பாடியிலுள்ள பெண்கள் தனிச்சிறையில் 400-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனா். இவா்களில், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடியைச் சோ்ந்த இஞ்சுவாதுனிதா (65) என்பவா் கடந்த 2003-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தாா்.

இவருக்கு கடந்த 10-ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். சிறைக் காவலா்கள் அவரை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com