பேருந்தில் கஞ்சா கடத்தல்: மதுரையைச் சோ்ந்தவா் கைது

ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

போதை பொருள்கள் நுண்ணறிவுப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஏ.டி.ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் காட்பாடியை அடுத்த ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சித்தூரிலிருந்து வேலூா் வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டதில், 50 வயது மதிக்கத்தக்க நபா் 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த சீதாராமன்(50) என்பதும், கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே அனக்காபள்ளியிலிருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. சீதாராமனை கைது செய்த போலீஸாா், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com