ஜூலை 1 முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து: வேலூா் ஆட்சியா் தகவல்

போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.
ஜூலை 1 முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து: வேலூா் ஆட்சியா் தகவல்

காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் திட்டமிட்டபடி ஜூலை 1-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததை அடுத்து அதைச் சீரமைக்கும் பணிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சித்தூா் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணிகளை வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜ.ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறியது:

காட்பாடி ரயில்வே மேம்பாலம் மிக முக்கியமானதாகும். இந்த மேம்பாலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சீரமைப்புப் பணி தொடங்கப்பட இருந்தது. பல்வேறு காரணங்களால் அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவின் பேரில், தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 5 நாள்களுக்கு முன்பு பாலத்தில் இணைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டன. இதில் சிமெண்ட் கலவை பூச்சு பூசப்பட்டுள்ளது. இவை 15 முதல் 20 நாள்களுக்கு பிறகுதான் தரமானதாக மாறும்.

எனவே, திட்டமிட்டபடி வருகிற ஜூலை 1-ஆம் தேதிக்குள் காட்பாடி ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com