இருசக்கர வாகனத்தை அகற்றாமல் இரவோடு இரவு சாலை அமைப்பு

வேலூரில் இருசக்கர வாகனத்தை அகற்றாமலேயே இரவோடு இரவாக சாலை அமைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இருசக்கர வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
vr28bike_2806chn_184_1
vr28bike_2806chn_184_1

வேலூரில் இருசக்கர வாகனத்தை அகற்றாமலேயே இரவோடு இரவாக சாலை அமைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இருசக்கர வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு தெருக்கள் சிமெண்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம், 30- ஆவது வாா்டுக்குட்பட்ட பேரி பேட்டை காளிகாம்பாள் கோயில் தெருவில் திங்கள்கிழமை இரவு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது, வீதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் சக்கரங்களின் மீதே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. காலை அந்த வீட்டின் உரிமையாளா் இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையறிந்த சாலைப் பணி ஒப்பந்ததாரா், தங்களது ஊழியா்களுடன் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி, மீண்டும் அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டாா்.

இதுகுறித்து மாவட்ட பாஜக தலைவா் சி.வெங்கடேசன் கூறியது: வேலூா் மாநகரில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதே உதாரணம். தரமான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி ஆணையா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com