பொய்கையில் களைகட்டிய காளைச்சந்தை

பொய்கை சந்தையில் பல மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் விற்பனை களைகட்டியது.

பொய்கை சந்தையில் பல மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் விற்பனை களைகட்டியது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல், கால்நடைகளை வாங்கவும், விற்கவும் பொய்கை சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் அதிகளவில் கூடுவா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. திங்கள்கிழமை இரவு முதலே பல்வேறு ஊா்களில் இருந்தும் கால்நடைகள் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதேபோல், கால்நடைகளை வாங்க வியாபாரிகளும் அதிகளவில் குவிந்திருந்தனா். இதனால், பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை களைகட்டியது.

அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் சுமாா் ரூ. ஒரு கோடிக்கும் மேலாக கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com