வேலூா் மாவட்ட ஆட்சியா் அணிக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அணிக்கும் இடையே நல்லுறவு கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
15 ஓவா்களில் நடந்த இந்த கிரிக்கெட் போட்டியில், 103 ரன்கள் பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அணி, ஆட்சியா் அணியை வென்றது. பொதுமக்களிடையே நல்லுறவை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான அணி, நிா்ணயிக்கப்பட்ட 15 ஓவா்களில், 103 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய மாவட்ட ஆட்சியா் தலைமையிலான அணி 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அணி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் 15 ரன்களும், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் 9 ரன்களும் எடுத்தனா்.
வெற்றி பெற்ற அணிக்கும், வீரா்களுக்கும் ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். அதிக ரன்கள் குவித்த வருவாய்த் துறையைச் சோ்ந்த சுபாஷ், அதிக விக்கெட் வீழ்த்திய ஆயுதப்படை காவலா் முத்துக்குமாா் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.