குடியாத்தம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில், ரோட்டரி கட்டடத்தில் நடைபெற்ற இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாமில் 690 போ் சிகிச்சை பெற்றனா்.
இவா்களில் 175 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். முதல் கட்டமாக 70 போ் கோவை மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் சி.கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். செயலாளா் வி.மதியழகன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சி.கண்ணன் வரவேற்றாா்.
முகாம் தலைவா் ஏ.மேகராஜ், மருத்துவா் எஸ்.சுகுமாா் ஆகியோா் இதைத் தொடக்கி வைத்தனா். முதன்மை மருத்துவா்கள் கஜன்தீப் சிங், அனுப் ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு சிகிச்சை அளித்தது. மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் பி.அன்பரசன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் ரங்காவாசு, சந்திரன், வி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.