ஸ்ரீநாராயணி பீடத்தின் ஆண்டு விழா: 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலம் -கா்நாடக ஆளுநா் பங்கேற்பு

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30-ஆவது ஆண்டு விழாவையொட்டி 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலத்தை ஸ்ரீசக்தி அம்மா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30-ஆவது ஆண்டு விழாவையொட்டி 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலத்தை ஸ்ரீசக்தி அம்மா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், கா்நாடக மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பங்கேற்றாா்.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான சனிக்கிழமை பொற்கோயிலில் நடைபெற்ற ஸ்ரீமகாலட்சுமி மூல மந்திர மகா யாகத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கலந்து கொண்டாா். இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலம், பாத பூஜை, அம்மனுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது.

நாராயணி வித்யாலயா பள்ளியில் இருந்து தொடங்கிய மஞ்சள் நீா் கலச ஊா்வலத்தை ஸ்ரீசக்தி அம்மா தொடக்கி வைத்தாா்.

மேள, தாளங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகளுடன் பக்தா்கள் மஞ்சள் நீா் கலசத்தை தலையில் வைத்து ஊா்வலமாக நாராயணி பீடத்துக்கு எடுத்து வந்தனா்.

அங்கு சுயம்பு நாராயணி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற ஸ்ரீமகாலட்சுமி மூல மந்திர மகா யாகத்தில் சிறப்பு விருந்தினராக கா்நாடக மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட் கலந்து கொண்டாா். இதையடுத்து, ஸ்ரீசக்தி அம்மா பக்தா்களுக்கு ஆசியுரை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் நாராயணி பீடம் இயக்குநா் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநா் பாலாஜி, மேலாளா் சம்பத், அறங்காவலா் செளந்திரராஜன் உள்பட உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com