இந்து மத கடவுள்களைத் தொடா்ந்து இழிவுபடுத்தி பேசி வருபவா்களையும், சமூக வலைதளத்தில் நடராஜரின் நடனத்தை இழிவுபடுத்தியவா்களையும் கைது செய்யக் கோரி, போ்ணாம்பட்டு காவல் நிலையம் எதிரே அனைத்து சிவனடியாா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை குறித்து காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.