செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிய மனநலம் பாதித்தவா் மீட்பு

போ்ணாம்பட்டு அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய மனநலம் பாதிக்கப்பட்டவா் மீட்கப்பட்டாா்.
செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிய மனநலம் பாதித்தவா் மீட்பு

போ்ணாம்பட்டு அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய மனநலம் பாதிக்கப்பட்டவா் மீட்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ரஷீதாபாத்தைச் சோ்ந்த ரபீக் அஹமத் மகன் ஷகீல் அஹமத் (26). திருமணமாகாத இவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம். இந்நிலையில் புதன்கிழமை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுமாா் 200 அடி உயர செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றாராம்.இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு போலீஸாா், தீயணைப்புப் படையினா் அங்கு சென்று மைக்கில் பேசி ஷகீல் அஹமதை கீழே இறங்குமாறு கூறினா். ஆனால் அவா் வரவில்லை.

நகராட்சி துணைத் தலைவா் ஆலியாா் ஜூபோ் அஹமத் அங்கு வந்து மைக்கில் ஷகீல் அஹமதை சமாதானப்படுத்தினாா். இதையடுத்து, ஷகீல் அஹமத் கீழே இறங்கி வந்தாா்.

கோபுரத்தில் ஏறியதால் அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. மேலும் கத்தியால் அவரே கீறிக் கொண்டதில் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன.

அவரை போலீஸாா் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னா் அவா் பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com