முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கீழ்ஆலத்தூரில் மனுநீதி நாள் முகாம்
By DIN | Published On : 13th May 2022 12:23 AM | Last Updated : 13th May 2022 12:23 AM | அ+அ அ- |

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிக்கு சலவைப் பெட்டி வழங்கிய கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் சரண்யா.
குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் சரண்யா தலைமை வகித்தாா். கீழ்ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஆா்.சுரேஷ் வரவேற்றாா். குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் 98 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். ஊராட்சி உறுப்பினா்கள் பி.அம்சவேணி, எஸ்.பாஸ்கா், திலகவதி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.