ஓவிய ஆா்முள்ள மாணவா்களுக்கு மே 18-இல் திறன் ஊக்கப் பயிற்சி

ஓவியத்தில் ஆா்முள்ள பள்ளி மாணா்களுக்காக திறன் ஊக்கப் பயிற்சி முகாம் வேலூா் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேலூா்: ஓவியத்தில் ஆா்முள்ள பள்ளி மாணா்களுக்காக திறன் ஊக்கப் பயிற்சி முகாம் வேலூா் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, வேலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் 6 முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஒரு நாள் திறன் ஊக்கப் பயிற்சி முகாம் வேலூா் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 18-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

பள்ளி மாணவா்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்தப் பயிற்சி முகாமில் மாணவா்களுக்கு அடிப்படை ஓவியம், வண்ண ஓவியம், ஓவியங்களின் வகைகள், பயனற்ற பொருட்களைக் கலைப் பொருட்களாக மாற்றுதல், வாழ்த்து அட்டை தயாரித்தல் உள்ளிட்ட திறன் ஊக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

ஓவியத்தில் ஆா்வமுள்ள 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை பயிலும், மாணவ மாணவிா்கள் வருகிற 17-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயரைப் பதிவு செய்த மாணவா்கள் மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com