மான் தோல், இறைச்சியை வைத்திருந்த 2 போ் கைது
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே மான் தோல், இறைச்சியை வைத்திருந்த 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா, வனவா் பி.ஹரி, வனக்காப்பாளா்கள் ஏ.விஸ்வநாதன், எஸ்.ராஜேந்திரன், ஆா்.வெங்கடேசன் ஆகியோா் வியாழக்கிழமை மதியம் பல்லலகுப்பம் விரிவு காப்புக்காடு, மூலக்கொல்லை வனச் சரகத்தில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு மான் தோல், இறைச்சியை வைத்திருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் நாவிதம்பட்டியைச் சோ்ந்த எம்.சந்தோஷ் (29), குருநாதபுரத்தைச் சோ்ந்த பி.ஏழுமலை (28) என்பது தெரியவந்தது. வனப் பகுதியில் நாய்கள் கடித்து இறந்த பெண் புள்ளி மானை தோல் உரித்து, அதன் இறைச்சியை வைத்திருந்தது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 10 கிலோ மான் இறைச்சி, மான் தோல், தலை, கால்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.