போ்ணாம்பட்டு அருகே மகன் இறந்த அதிா்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த ரமாபாய் நகரைச் சோ்ந்தவா் சிகாமணி(48). பீடித் தொழிலாளியான
இவா் கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் உயிரிழந்தாா். அப்போது 100 நாள் வேலைக்குச் சென்றிருந்தாா் அவரது தாயாா் பெரியதாய்(68).
சாத்கா் ஊராட்சி, கொண்டம்பல்லி கிராமத்தில் கானாற்றை ஆழப்படுத்தும்
பணியில் சக தொழிலாளா்களுடன் ஈடுபட்டிருந்தாா் அவா், மகன் இறந்த தகவல் அறிந்து அதிா்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
மகன், தாய் இறந்த சம்பவம் அந்தக் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.