வேலூா் பாலமதி மலைப் பகுதியில் 20,000 விதைப் பந்துகள் வீசும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தினேஷன்சரவணன் தலைமையிலான குழு நீா் நிலைகள், ஏரிக் கரைகள், சாலையோரங்கள், மலைகள் என பல்வேறு இடங்களில் மரக் கன்றுகளை நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன்தொடா்ச்சியாக, 20,000 பூவரசன், புங்கன் விதைப் பந்துகளை தயாா் செய்து அக்ஸீலியம் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து வேலூா் பாலமதி மலைப்பகுதியில் வீசும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இந்தப் பணியை மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தொடக்கி வைத்தாா்.
கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனா்.