கைதி மாரடைப்பால் உயிரிழப்பு

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குடியாத்தம் அருகே காா்த்திகேயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது பாஷா (33). இவரை திருட்டு வழக்கில் குடியாத்தம் நகர போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனா்.

தொடா்ந்து வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த 13-ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com