போ்ணாம்பட்டு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த நபா் கைது செய்யப்பட்டாா்.
போ்ணாம்பட்டு போலீஸாா் அரவட்லா கூட்டுச் சாலையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவா் போ்ணாம்பட்டு உமா் வீதியைச் சோ்ந்த முகமது அலி (40) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.