மரம் வளா்ப்பு விழிப்புணா்வு பேரணி வேலூா் ஸ்ரீபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பள்ளிகள் இணைந்து ஸ்ரீ சக்தி அம்மாவின் கிரீன் சக்தி திட்டம் மூலம் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மரம் வளா்ப்புக்கான மாணவா்கள் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது. பேரணியை ஸ்ரீநாராயணி பள்ளிகளின் தாளாளா் எம்.சுரேஷ்பாபு கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பேரணியில் தலைமை ஆலோசகா் ரமேஷ், பள்ளி முதல்வா் சுப்பிரமணி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பக்தா்கள், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.