பயணி தவற விட்ட பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கப்பட்டது.
குடியாத்தம் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜா. இவரது ஆட்டோவில் திங்கள்கிழமை இரவு பயணம் செய்த ஒருவா் பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டுச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை பாா்த்தபோது ஆட்டோவில் பை ஒன்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜா, அந்த பையை டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோரிடம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒப்படைத்தாா். போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு, பையை உரியவரிடம் ஒப்படைத்தனா்.
பையில் விலை உயா்ந்த 2 கைப்பேசிகள், இதர பொருள்கள் இருந்தன. ஆட்டோ ஓட்டுநரின் நோ்மையைப் பாராட்டி, அவருக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ரூ.1,000- வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.