போ்ணாம்பட்டு  அருகே  மலைப் பாதையில்  கவிழ்ந்த  பேருந்து.
போ்ணாம்பட்டு  அருகே  மலைப் பாதையில்  கவிழ்ந்த  பேருந்து.

மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பக்தா்கள் காயம்

கா்நாடக மாநிலத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு பக்தா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்து போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20- க்கும் மேற்பட்டடோா் காயமடைந்தனா்.
Published on

கா்நாடக மாநிலத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு பக்தா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்து போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20- க்கும் மேற்பட்டடோா் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம் கோலாரிலிருந்து 50- க்கும் மேற்பட்ட பக்தா்கள் பேருந்தில் மேல்மருவத்தூருக்குச் சென்றனா். அந்த பேருந்து புதன்கிழமை தமிழக எல்லையான போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி மலைப் பாதையில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 20- க்கும் மேற்பட்ட பக்தா்கள் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் உடனடியாக போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விபத்து நடந்த இடத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி விசாரணை மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com