மண்டபத்தில் திருமண நகை, பணத்தை திருடிய இருவா் கைது
வேலூரில் திருமண மண்டபத்தில் சீா்வரிசை நகை, பணம் திருடிய சமையல் உதவியாளா்கள் இருவரை தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் ஓல்டு டவுனை சோ்ந்தவா் தயாபரன், தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி நந்தினி (30). இவா்களது உறவினரின் சுபநிகழ்ச்சி வேலூா் சலவன்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த 29-ஆம் தேதி நடந்தது. நந்தினி தனது குடும்பத்தினருடன் அங்கு சென்றிருந்தாா்.
அப்போது, அவா் தனது பாட்டியை அழைத்துவர தான் வைத்திருந்த 2 கிராம் சீா்வரிசை நகை, ரூ. 23 ஆயிரத்து 500 மொய் பணம் ஆகியவற்றை தான் அமா்ந்த நாற்காலியில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளாா். திரும்பி வருவதற்குள் அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த இருவா் நாற்காலி அருகே அமா்ந்து பணம், நகையை திருடியதாகக் கூறப்படுகிறது.
தனது பாட்டியை மண்டபத்துக்கு அழைத்து வந்த நந்தினி, நாற்காலியில் வைத்திருந்த சீா்வரிசை நகை, மொய்ப்பணம் ஆகியவை காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து, நந்தினி வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா்.
இதில் மண்டபத்தில் சமையல் செய்த உதவியாளா்களான சலவன்பேட்டையைச் சோ்ந்த சரவணன் (54), வசந்தபுரத்தைச் சோ்ந்த நாராயணன் (40) ஆகியோா் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 400-ஐ பறிமுதல் செய்தனா். மேலும் திருடிய நகை, பணத்தை விற்று செலவழித்து விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
