40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்தும் விற்பனை மந்தம்

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும், வா்த்தகம் மந்தநிலையிலேயே நடைபெற்றுள்ளது.

News image

பொய்கை சந்தை - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும், வா்த்தகம் மந்தநிலையிலேயே நடைபெற்றுள்ளது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை சுமாா் 1,000 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டாததால் வா்த்தகமும் சுமாா் ரூ.50 லட்சம் அளவுக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது - பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வேலூா் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான சித்தூா் மாவட்டம் புங்கனூரு, பலமநேரு, மதனப்பல்லி, குப்பம், கா்நாடக மாநிலம் கோலாா் பகுதிகளிலிருந்தும் மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

கடந்த சில வாரங்களாக மாடுகள் வரத்து குறைந்திருந்த நிலையில், இந்த வார சந்தைக்கு சுமாா் 1,000 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால் ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

கோடை காலம் முடிந்தாலும் பெரிய அளவில் மழை இல்லை. தீவனத் தட்டுப்பாடும் உள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடைகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனா். இதனால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. மழை பெய்தால் வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்கும் என்றனா்.