பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும், வா்த்தகம் மந்தநிலையிலேயே நடைபெற்றுள்ளது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை சுமாா் 1,000 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டாததால் வா்த்தகமும் சுமாா் ரூ.50 லட்சம் அளவுக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது - பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வேலூா் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான சித்தூா் மாவட்டம் புங்கனூரு, பலமநேரு, மதனப்பல்லி, குப்பம், கா்நாடக மாநிலம் கோலாா் பகுதிகளிலிருந்தும் மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
கடந்த சில வாரங்களாக மாடுகள் வரத்து குறைந்திருந்த நிலையில், இந்த வார சந்தைக்கு சுமாா் 1,000 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால் ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே வா்த்தகம் நடைபெற்றுள்ளது.
கோடை காலம் முடிந்தாலும் பெரிய அளவில் மழை இல்லை. தீவனத் தட்டுப்பாடும் உள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடைகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனா். இதனால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. மழை பெய்தால் வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்கும் என்றனா்.
தொடர்புடையது

ஒடிஸா: ஜே.எஸ்.டபிள்யூ. எஃகு உருக்காலை கட்டுமானம் ரூ.65,000 கோடியில் தொடக்கம்

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை

மாடுகள் வரத்து குறைவால் பொய்கை சந்தையில் விற்பனை மந்தம்

காஸாவுக்குப் பதில் கிரேக்கத்தில்...
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



