மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் சாவு

கோவையில் மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

கோவை: கோவையில் மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

கோவை, சரவணம்பட்டி காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் ஜெயராம். இவரது மகன் சந்திரன்(15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் துணிகளை அயா்ன் பாக்ஸ் மூலம் தேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, பெற்றோா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து சந்திரனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com