வால்பாறையில் 40 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாரந்தோறும் சிறப்பு முகாம் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி 10 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வால்பாறை வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் அமைக்கப்பட்ட 40 மையங்கள் மூலம் சுகாதாரத் துறையினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.