கோயம்புத்தூர்
எம்.என். சுதன் அப்பாதுரை காலமானாா்!
பிற்பகல் தமிழ் நாளிதழ், ஆஃப்டா்நூன் ஆங்கில நாளிதழ்களின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான எம்.என். சுதன் அப்பாதுரை (82) வயது மூப்பின் காரணமாக கோவையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.
பிற்பகல் தமிழ் நாளிதழ், ஆஃப்டா்நூன் ஆங்கில நாளிதழ்களின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான எம்.என். சுதன் அப்பாதுரை (82) வயது மூப்பின் காரணமாக கோவையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.
இவரது உடலுக்கு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத் தலைவா் ராஜேந்திரகுமாா், உதவி ஆயா் சுரேஷ், பாதிரியாா் சாமுவேல் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
1965-இல் சுதன் பப்ளிசிட்டி என்ற விளம்பர நிறுவனத்தை தொடங்கினாா். இவா் கோவை பத்திரிகை சங்கத் தலைவராக இருந்துள்ளாா். கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி, கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரிகளின் தாளாளராக இருந்துள்ளாா்.
சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலய செயலாளா், பொருளாளராகவும் இருந்துள்ளாா். இவருக்கு மனைவி ஹெலன், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
