பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

Updated on

ஒண்டிப்புதூா் பேருந்து நிறுத்தத்தில் பெண்ணிடமிருந்து 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாவட்டம், இருகூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்ராஜ்(31). இவரது மனைவி கிரேஸ் மேரி (29). இவா்கள் தங்களது குழந்தைகளுடன் திருநெல்வேலி செல்வதற்காக ஒண்டிப்புதூா் பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காத்திருந்தனா்.

அப்போது இரவு 11.30 மணி அளவில் அங்கு வந்த பேருந்தில் ஏறுவதற்காக சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபா் கிரேஸ் மேரியிடம் 5 பவுன் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இது குறித்து கிரேஸ் மேரி அளித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை பறித்துவிட்டு தப்பிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com