வால்பாறை நகராட்சி ஆணையராக ஜி.கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
வால்பாறை நகராட்சி ஆணையராக பொறியாளர் மற்றும் மேலாளர்களாக இருந்தவர்களே இதுவரை பெறுப்பு வகித்து வந்தனர். இந்நிலையில், தற்போது முதல்முறையாக நேரடி ஆணையராக ஜி.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்தார். வால்பாறை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, வால்பாறை நகராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு அரசின் குடியிருப்புகள் கட்டும் திட்டங்கள் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.