குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

பொள்ளாச்சியை அடுத்த கரப்பாடியில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பொள்ளாச்சியை அடுத்த கரப்பாடியில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கரப்பாடி கிராமத்தில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி-கரப்பாடி சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com