ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கோவை வந்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கோவை வந்தார். பின்னர் கார் மூலமாக ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்ய பார்மஸிக்கு சென்றார்.
ஆயுர்வேத சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ள தனி அறையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் புத்துணர்வுக்கான ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொள்ள ஓரிரு தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.