பெண் உள்பட மூவரைத் தாக்கியதாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (56). திமுகவைச் சேர்ந்த இவர், ஆச்சிபட்டி ஊராட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார். இவர், தனது வீட்டில் கோழிகள், ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது கோழிகள், ஆடுகள் அருகிலுள்ள நடராஜ் (50) என்பவரது தோட்டத்துக்குள் செல்வதால், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஈஸ்வரன், அங்கிருந்த நடராஜ் மனைவி சந்திரமதியின் ஜாக்கெட்டை கிழித்ததுடன், நடராஜ், அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகியோரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.