சூலூர் அருகே பாரதிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 16-ஆம் தேதி பூச்சாட்டுதல், 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) கம்பம் நடுதல், 23-ஆம் தேதி அம்மன் ஆபரணம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. நொய்யல் ஆற்றிலிருந்து அம்மன் கரகம் புதன்கிழமை அழைத்து வரப்பட்டது. பக்தர்கள் பூவோடு, பால் குடம் எடுத்துவந்து வழிபட்டனர். அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை, தீர்த்தக் குடம், மாவிளக்கு, முளைப்பாரிகை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.