டெங்கு காய்ச்சல்: சிறுமி சாவு

டெங்கு காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

டெங்கு காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் பொட்டனேரியைச் சேர்ந்தவர் தொழிலாளி பழனிசாமி. இவரது மகள் பிருந்தா (11). இவர்,  காய்ச்சல் காரணமாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு,  அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிருந்தா அனுமதிக்கப்பட்டார். அங்கு,  அவர் புதன்கிழமை உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 18 பேரும்,  வைரஸ் காய்ச்சலுக்கு 116 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com