இந்திய கம்பெனி செயலர் சங்க கோவை கிளையின் 17-ஆவது மாணவர் கருத்தரங்கு கோவையில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
இந்திய கம்பெனி செயலர் நிறுவனம், தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களுடன் இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கு, சின்ன வேடம்பட்டி டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில், கம்பெனிச் சட்டம் 2013, வணிகம், பிராண்ட் செட்டர் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கு, விநாடி - வினா போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 0422 - 2237006, 89036 32682, 94864 77497 என்ற தொடர்பு எண்கள் மூலமாகவோ, icsicbechapter1@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ முன் பதிவு செய்து கொள்ளலாம்.