பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி சமூக நீதிக் கட்சி சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய கூலித் தொழிலாளர் சங்கத் தலைவர் குட்டையூர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர செயலாளர் ரவிச்சந்திரன், வெள்ளிங்கிரி, ரங்கசாமி, சின்னசாமி, ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் பன்னீர்செல்வம், பொதுசெயலாளர் வெள்ளமடை நாகராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.