கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.