இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய மாநாடு வால்பாறை தியாகிகள் நினைவரங்ககில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிஐடியூ தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் பி.பரமசிவம் கொடியேற்றி மாநட்டைத் தொடக்கி வைத்தார். ஒன்றியத் தலைவர் ஏ.எஸ்.முகமது சுல்தான் தலைமை வகித்தார். வால்பாறை கிளைத் தலைவர் எஸ்.முகமது முனவர் வரவேற்றார்.
இதில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க வேண்டும்.
வசதி படைத்தவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு சமமான கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் கிடைக்கச் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டன.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா. அன்பரசன், தலைவர் ரவீந்திரன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். கிளைச் செயலாளர் அஸாருதீன் நன்றி கூறினார்.