மதுக்கரை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
மதுக்கரை அருகே, மாரிசெட்டிபதி பகுதியைச் சேர்ந்தவர் முத்தே கவுண்டர் (88).
வீட்டிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வெளியே சென்றவர் அங்குள்ள 30 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி முத்தே கவுண்டர் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து க.க.சாவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.