தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் உயிரியல் சார் நெறிமுறைகள் குறித்த மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், யுனெஸ்கோ உயிரியில் சார் நெறிமுறைகள் இந்திய அமைப்பு ஆகியன இணைந்து கோவை மருந்தாக்கியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா இணை மருத்துவக் கழகம் மற்றும் கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு உயிரியில் சார் நெறிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பை நடத்தியது. இதற்கான தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தாக்கியல் மற்றும் செவிலியர் ஆகிய துறைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் உயிரியியல் சார் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக உருவாக்கப்பட்ட பாடத் திட்டத்தின் மூலம் இதுவரையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இணை சுகாதார அறிவியல் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.