சூலூரை அடுத்த காமாட்சிபுரத்தில் மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தில் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பாஜக இருகூர் மண்டலத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் இ.க.சிதம்பரம் வரவேற்றார். பாஜக கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி எரிவாயு உருளை, அடுப்பு மற்றும் உபகரணங்களை வழங்கி மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் இரண்டாவது தவணையாக 30 பேருக்கு இலவச எரிவாயு உருளை, அடுப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த விஜயகுமார், இளைஞரணி வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிஹரன் நன்றி கூறினார்.