கோவை அருகே தென்னம்பாளையத்தில் கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சதீஷ் (18). இவர் தென்னம்பாளையம் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
திங்கள்கிழமை இரவுப் பணிக்கு சென்ற சதீஷ், சுமார் 9 மணி அளவில் உணவு அருந்த அவிநாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், சதீஷ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.