டெங்கு காய்ச்சல் பாதிப்பு:  கோவையில் மூவருக்கு சிகிச்சை

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. அன்னூர் வட்டம், அல்லிகாரன்பாளையத்தைச் சேர்ந்த கலைவாணி (52), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலசந்திரன் (23) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 
இந்நிலையில் தற்போது கோவையைச் சேர்ந்த மூன்று பேர், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொன்னையா என்பவரும் சிகிச்சை பெற்று  வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com