கார் விபத்தில் தம்பதி சாவு; மகன் காயம்

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழந்தனர். மகன் பலத்த காயமடைந்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழந்தனர். மகன் பலத்த காயமடைந்தார்.
தருமபுரி மாவட்டம், குமாரசாமிபட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் ஸ்ரீனிவாசன் (69).இவர் அங்குள்ள கோயிலில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி லட்சுமி(63). இவர்களது மகன் பாலமோகன் (36). இவரும் கோயில் பூசாரியாக உள்ளார். 
ஸ்ரீனிவாசனின் மகள் காயத்ரி கோவை, வடவள்ளியில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீனிவாசன், லட்சுமி மற்றும் பாலமோகன் ஆகிய மூவரும் தருமபுரியில் இருந்து காரில் வந்துள்ளனர். காரை பாலமோகன் ஓட்டி வந்தார். 
அவர்களது கார், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது அதிக வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத் தடுப்பில் மோதியது. இதில், ஸ்ரீனிவாசன், லட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலமோகன் பலத்த காயமடைந்தார். 
இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com